Published : 08 Jul 2021 03:12 AM
Last Updated : 08 Jul 2021 03:12 AM
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனியை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்களை தயாரித்து, அச்சிட்டு விநியோகிக்க தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட அரசு நிறுவனமாகும்.
ஒன்று முதல் 12-ம் வகுப்பு வரைதமிழ் மற்றும் ஆங்கில வழி பாடநூல்கள், சிறுபான்மை மொழிப்பாட நூல்கள், மேல்நிலைப் பள்ளிக்கான தொழிற்கல்வி பாடப் புத்தகங்கள், ஆசிரியர் பட்டயப் பயிற்சிக்கான பாடப் புத்தகங்கள் மற்றும் பல்நுட்பக் கல்லூரிகளுக்கான பாடப் புத்தகங்கள் ஆகியவற்றை தயாரிக்கும் பணியை இக்கழகம் திறம்பட மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த லியோனி, சிறந்த ஆசிரியர், மேடைபேச்சாளர், இலக்கிய சொற்பொழிவாளர், நகைச்சுவை பட்டிமன்ற நடுவர் ஆவார். இவருக்கு 2010-ம்ஆண்டுக்கான கலைமாமணி விருது தமிழக அரசால் வழங்கப் பட்டது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT