Published : 07 Jul 2021 03:12 AM
Last Updated : 07 Jul 2021 03:12 AM
வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
சிஎம்டிஏ எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் முறைகேடாக, விதிகளை மீறி கட்டப்படும் கட்டிடங்களை கண்காணிக்க தனியாக குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் விதிகளை மீறி கட்டப்படும் கட்டிடங்கள் இடிக்கப்படும். வீடு கட்ட தடையில்லா சான்றிதழ் பெறும்போது தரகர்கள் முறைகேட்டில் ஈடுபடாமல் தடுக்க நடவடிக்கைஎடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT