Published : 07 Jul 2021 03:13 AM
Last Updated : 07 Jul 2021 03:13 AM
நாமக்கல்: பள்ளிபாளையம் அருகே அருந்தமிழர் பேரவை நிறுவனர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
பள்ளிபாளையம் அருகே காவிரி கரட்டகாடு பகுதியைச் சேர்ந்தவர் ரவி (45). இவர் அருந்தமிழர் பேரவையின் நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே உள்ள மாரியம்மன் கோயில் திடலில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் சிலர் அவரை உருட்டுக் கட்டையால் தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் பலத்த காயமடைந்த ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் நேரில் விசாரணை நடத்தினார். முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம், என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக பள்ளிபாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT