Published : 06 Jul 2021 03:12 AM
Last Updated : 06 Jul 2021 03:12 AM

கரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 39,796 ஆக சரிவு :

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 39,796ஆக குறைந்துள்ளது. அதேபோல் உயிரிழப்பும் 723 ஆக குறைந்துள்ளது.

கரோனா வைரஸ் பரவலின் 2-வது அலை முடிவுக்கு வருவதன் அறிகுறியாக கடந்த 2 மாதமாகவே பாதிப்போர் எண்ணிக்கையும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில், தடுப்பூசி போடும் பணியும் நாடு முழுவதும் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 39,796 ஆகவும், உயிரிழப்பு 723 ஆகவும் குறைந்துள்ளது. இதுவரை மொத்தம் 4 லட்சத்து 2,728 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 42,352 ஆக உள்ளது. இதன் மூலம் நாட்டில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 97 லட்சத்து 430 ஆக அதிகரித்துள்ளது. தற்போது நாடு முழுவதும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 82,071 ஆக உள்ளது.

கடந்த 28 நாட்களாக தொடர்ந்து பாதிப்போர் எண்ணிக்கை 5 சதவீதத்துக்கு கீழ் உள்ளது. இதற்கிடையில், நேற்று மட்டும் 25 லட்சத்து 22,504 பேருக்கு கரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் ஒட்டுமொத்தமாக இதுவரை 41 கோடியே 97 லட்சத்து 77,457 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இத் தகவலை மத்திய சுகாதாரத் துறை நேற்று தெரிவித்தது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x