Published : 06 Jul 2021 03:12 AM
Last Updated : 06 Jul 2021 03:12 AM

தெலங்கானாவில் ஒரு மணி நேரத்தில் 10 லட்சம் மரக்கன்று நட்டு உலக சாதனை :

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில், ஒரு மணி நேரத்தில் (10 லட்சம்) மரக்கன்றுகள் நட்டு உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநில அரசு ‘ஹரித ஹாரம்’ எனும் பெயரில் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை மாநிலம் முழுவதும் அமல் படுத்தி வருகிறது. இத்திட்டத்தை கடந்த 2014-15ம் ஆண்டில் முதல்வர் கே. சந்திரசேகர ராவ் தொடங்கி வைத்தார். இதன் மூலம் தெலங்கானாவில் 230 கோடி மரக்கன்றுகளை நடுவதே லட்சியம் என அறிவித்தார். இதுவரை இத்திட்டத்தின் கீழ் கடந்த 7 ஆண்டுகளில் 62 கோடி மரங்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை வனத்துறை அமைச்சர் இந்திரகிரண் ரெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு, மாநிலங்களவை உறுப்பினரான சந்தோஷ்குமார் தலைமையில் ஆதிலாபாத்தில் ஒரு மணி நேரத்தில் ஒரு மில்லியன் (10 லட்சம்) மரக்கன்றுகள் நடப்பட்டன. இங்குள்ள வனத்துறைக்கு சம்மந்தப்பட்ட 200 ஏக்கர் நிலத்தில், 30 ஆயிரம் தெலங்கானா ராஷ்டிர சமிதி தொண்டர்கள் பங்கேற்று ஒரே மணி நேரத்தில் ஒரு மில்லியன் மரக்கன்றுகளை நட்டு சாதனை படைத்துள்ளனர். இதற்கு முன், துருக்கியில் கடந்த 2019ம் ஆண்டு 3.03 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டதே கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x