Published : 06 Jul 2021 03:13 AM
Last Updated : 06 Jul 2021 03:13 AM
நாமக்கல்: கொல்லிமலை பகுதியில் பெய்த கனமழையால் 10-வது கொண்டை ஊசி வளைவில் நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு சாலையில் விழுந்தன. அவற்றை நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதனால், கொல்லிமலை பைல்நாடு பகுதியில் உற்பத்தியாகும் பெரியாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி உள்ளிட்டவற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே பலத்த மலை காரணமாக கொல்லிமலை 10-வது கொண்டை ஊசி வளைவில் நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு சாலையில் விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து சென்று சாலையின் நடுவே கிடந்த பாறைகளை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் பெய்த மழையளவு விவரம் (மி.மீ.,) எருமப்பட்டி 10, குமாரபாளையம் 15, மங்களபுரம் 88, மோகனூர் 20, நாமக்கல் 19, பரமத்தி வேலூர் 20, புதுச்சத்திரம் 32, ராசிபுரம் 86.20, சேந்தமங்கலம் 14, திருச்செங்கோடு 46, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 10, கொல்லிமலை செம்மேடு 72 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.கொல்லிமலை 10-வது கொண்டை ஊசி வளைவின் மேற்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாறைகள் உருண்டு சாலையில் விழுந்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT