Published : 06 Jul 2021 03:13 AM
Last Updated : 06 Jul 2021 03:13 AM

மோடி அரசு இருக்கும் வரை பெட்ரோல் விலை குறையாது : கார்த்தி சிதம்பரம் எம்பி பேட்டி

காரைக்குடி

மோடி அரசு இருக்கும் வரை பெட்ரோல் விலை குறையாது என சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் கூறினார்.

காரைக்குடியில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீது புகார் தெரிவித்ததால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சந்திரன், பாலா, பிரபு ஆகிய நிர்வாகிகள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கார்த்தி சிதம்பரம் எம்பி, எம்எல்ஏக்கள் மாங்குடி, கரியமாணிக்கம், முன்னாள் எம்எல்ஏ ராமசாமி ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸில் சேர்ந்தனர்.

பின்னர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஒன்றிய அரசு என்பது சரியான வார்த்தைதான். யூனியன் என்ற வார்த்தைக்கு ஒன்றியம் என்றுதான் பொருள். அதனால் அதிமுகவின் கருத்து தவறானது. பொருளாதாரம் பல மடங்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் நாட்டுக்கு மாற்று அரசியல் தேவை. அதற்குத் தலைமை தாங்க தகுதியான இயக்கம் காங்கிரஸ் மட்டுமே. மற்ற நாடுகளில் அனைத்துப் பொருட்களுக்கும் ஒரே மாதிரியான ஜிஎஸ்டிதான் உள்ளது. ஆனால், நம் நாட்டில் மட்டுமே ஒவ்வொரு பொருளுக்கும் வெவ்வேறு வித மான ஜிஎஸ்டி உள்ளது.

பொருளாதாரம் பாதிக்கப்பட்டதால் 130 கோடி மக்களையும் வரி செலுத்த வைக்க பெட்ரோல், டீசல் மீது அதிக வரியை விதிக்கின்றனர். பாஜகவின் மோடி அரசு இருக்கும் வரை பெட்ரோல், டீசல் விலை குறையாது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x