Published : 05 Jul 2021 03:13 AM
Last Updated : 05 Jul 2021 03:13 AM
வில்லிபுத்தூர் ரைட்டன்பட்டி தெருவைச் சேர்ந்தவர் முருகன். காவல்துறையில் சிறப்பு எஸ்.ஐ.யாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். நேற்று முன்தினம் வில்லிபுத்தூர் தெற்கு ரத வீதியில் உள்ள ஒரு வங்கியில் தனது கணக்கிலிருந்து ரூ.50 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார். அவருக்கு பின்னால் வந்த நபர், தரையில் பணம் கிடப்பதாகக் கூறி முருகனின் கவனத்தை திசைதிருப்பி பணப்பையை பறித்துக் கொண்டு தப்பினார். வில்லிபுத்தூர் நகர் போலீஸார் விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT