Published : 05 Jul 2021 03:13 AM
Last Updated : 05 Jul 2021 03:13 AM

ஓய்வுபெற்ற எஸ்.ஐ.யிடம் நூதன முறையில் பணம் பறிப்பு :

வில்லிபுத்தூர் ரைட்டன்பட்டி தெருவைச் சேர்ந்தவர் முருகன். காவல்துறையில் சிறப்பு எஸ்.ஐ.யாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். நேற்று முன்தினம் வில்லிபுத்தூர் தெற்கு ரத வீதியில் உள்ள ஒரு வங்கியில் தனது கணக்கிலிருந்து ரூ.50 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார். அவருக்கு பின்னால் வந்த நபர், தரையில் பணம் கிடப்பதாகக் கூறி முருகனின் கவனத்தை திசைதிருப்பி பணப்பையை பறித்துக் கொண்டு தப்பினார். வில்லிபுத்தூர் நகர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x