Published : 02 Jul 2021 03:14 AM
Last Updated : 02 Jul 2021 03:14 AM

திருமணம் : 4 பேர் கைது :

விருதுநகர் புல்லலக்கோட்டை காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மொட்டைச்சாமி மகன் ரமேஷ்குமார்(20). இவர் விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்த உறவினரின் மகளான 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொள்வதாகக் கூறியுள்ளார். 2 நாட்களுக்கு முன் அச்சிறுமியை கடத்திச் சென்றுள்ளார். தகவலறிந்த சிறுமியின் தந்தை அங்கு சென்றபோது இரு தரப்பினரிடையே பேச்சுவார் த்தை நடத்தப்பட்டு அன்று இரவு 7 மணிக்கு அப்பகுதியில் உள்ள காளியம்மன் கோயிலில் திருமணம் செய்து வைத்தனர்.

இது குறித்து விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், சமூக நலத் துறை விரிவாக்க அலுவலர் புஷ்பவல்லி புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மணமகன் ரமேஷ்குமார், அவரது பெற்றோர் மற்றும் சிறுமியின் தந்தையைக் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x