Published : 02 Jul 2021 03:14 AM
Last Updated : 02 Jul 2021 03:14 AM
அரியலூர்: ஏரி மற்றும் குளங்களில் விவசாயிகள் வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி அரியலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் முன்னேற்ற கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் தலைவர் பூ.விசுவநாதன் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் பரமசிவம், செழியன், அணிக்குறிச்சி சாமிநாதன், சின்னப்பன், சக்கரவர்த்தி, இளவரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், ஏரி மற்றும் குளங்களில் விவசாயிகள் வண்டல் மண் எடுத்துக்கொள்ள விதிகள் எளிமையாக்கப்பட வேண்டும். போலீஸாரின் கெடுபிடி இருக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. பின்னர், ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதியிடம் மனு அளிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT