Published : 02 Jul 2021 03:14 AM
Last Updated : 02 Jul 2021 03:14 AM
திருச்சி: திருச்சி விற்பனைக் குழுவின் கட்டுப்பாட்டில் செயல்படும் லால்குடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மறைமுக ஏலம் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது.
இந்த ஏலத்தில் கூகூர், நகர், மயில்ரங்கம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 14 விவசாயிகள் தாங்கள் விளைவித்த எள்ளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். ஏலத்தில் 5 வியாபாரிகள் பங்கேற்று அதிகபட்சமாக குவிண்டாலுக்கு ரூ.10,316-க்கு ஏலம் எடுத்தனர். சராசரியாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.9,400 விலை போனது. இந்த ஏலத்தில் மொத்தம் 7,468 கிலோ எள் ரூ.7,40,531-க்கு விற்பனை செய்யப்பட்டது. திருச்சி விற்பனைக் குழு செயலாளர் சுகுமார், கண்காணிப்பாளர் காந்தி காமராஜ், உரிம இட ஆய்வாளர் வனிதா, மேற்பார்வையாளர் செல்வம் உள்ளிட்டோர் மேற்பார்வையில் ஏலம் நடைபெற்றது. லால்குடி விற்பனைக் கூட மேற்பார்வையாளர் விவேக் மற்றும் ஊழியர்கள் சதீஷ், சிவசக்தி ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்த ஏலம் வாரந்தோறும் புதன்கிழமை நடைபெறும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT