Published : 01 Jul 2021 03:17 AM
Last Updated : 01 Jul 2021 03:17 AM
கரூர்: கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கடந்த 28-ம் தேதி முதல் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், ஜவுளி, நகைக் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனால், கரூர் ஜவஹர் பஜாரில் ஜவுளிக் கடைகள் மற்றும் நகைக் கடைகள் விதிகளை மீறி திறக்கப்பட்டுள்ளதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, கோட்டாட்சியர் என்.எஸ்.பாலசுப்பிரமணியன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் பழனிசாமி உள்ளிட்டோர் அங்கு சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது, அங்குள்ள ஒரு நகைக்கடை ஷட்டரை கோட்டாட்சியர் திறந்து பார்த்தபோது, அங்கு 50-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். நகைக்கடை உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்த கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், ரூ.5,000 அபராதம் விதித்து கடையை மூட உத்தரவிட்டார். இதேபோல, விதிகளை மீறி திறக்கப்பட்டிருந்த ஜவுளி, நகைக்கடைகளை மூட உத்தரவிட்டதுடன், மொத்தம் 12 கடைகளுக்கு ரூ.47,500 அபராதம் விதித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT