Published : 29 Jun 2021 06:12 AM
Last Updated : 29 Jun 2021 06:12 AM

சர்க்கரை ஆலையை இயக்க அமைச்சரிடம் முறையிட்ட கிராம மக்கள் :

கூட்டுறவு சர்க்கரை ஆலையை இயக்கவும், சாலையை சரிசெய்ய வும் அமைச்சர் நமச்சிவாயத்திடம் தொகுதி மக்கள் முறையிட்டனர்.

புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதியில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை அமைச்சர் நமச்சிவாயம் நேற்று தொடங்கி வைத்தார். அதையடுத்து அப்பகுதி களை பார்வையிட்டார். அப்போது அப்பகுதி பெண்கள், “வாக்கு கேட்டு நீங்கள் வரவில்லை. உங்கள் தரப்பிலிருந்தும் யாரும் வரவில்லை. ஆனால் நாங்கள் உங்களுக்கு வாக்களித்தோம். சாலை வசதி மோசமாக உள்ளது. சரிசெய்து தாருங்கள்” என்று குறிப் பிட்டனர்.

இதைத்தொடர்ந்து அமைச்சரி டம் பல பெண்கள் முறையிட்டனர். அதை கேட்டுக்கொண்ட அமைச்சர் நமச்சிவாயம், “எந்த நம்பிக்கை யில் எனக்கு வாக்களித்தீர்களோ, அதன்படி குறைகளை சரி செய்து தருவேன்” என்று குறிப்பிட்டார்.

அதைத்தொடர்ந்து ஜேசிபி இயந்திரத்தில் தூர்வாரும் பணிகளை தொடங்கி வைத்தார். அப் போது மக்கள், “தங்கள் பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. லிங்காரெட்டிபாளையம் சர்க்கரை ஆலை இயங்காததால் வேலை இல்லாமல் கஷ்டத்தில் உள்ளோம்” என்று குறிப்பிட்டனர்.

பொதுமக்களின் குறைகளை களைய முதல்வரிடம் பேசி நட வடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x