Published : 28 Jun 2021 03:11 AM
Last Updated : 28 Jun 2021 03:11 AM

5,127 பேருக்கு கரோனா தொற்று : முதியவர்கள் உட்பட 91 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 2,904, பெண்கள் 2,223 என மொத்தம் 5,127 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக கோவையில் 649, ஈரோட்டில் 530, சேலத்தில் 343, திருப்பூரில் 316, சென்னையில் 308 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 24 லட்சத்து 65,874 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 23 லட்சத்து 90,783 பேர் குணமடைந்துள்ளனர். 42,801 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரசு, தனியார் மருத்துவமனைகளில் நடுத்தர வயதினர், முதியவர்கள் உட்பட 91 பேர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக சென்னையில் 9 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 32,290ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x