Published : 28 Jun 2021 03:14 AM
Last Updated : 28 Jun 2021 03:14 AM
காரைக்கால் ரோஜா காலனி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின்பேரில், சிறப்பு அதிரடிப்படை போலீஸார் நேற்று அப்பகுதிக்குச் சென்று கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, காரைக்கால் மீராப்பள்ளி தோட்டத்தைச் சேர்ந்த முகமது கைஃப் என்பவர், அங்கு கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்து, ரூ.10 ஆயிரம் மதிப்பிலான 15 கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT