Published : 28 Jun 2021 03:14 AM
Last Updated : 28 Jun 2021 03:14 AM

மதுபாட்டில்கள் பதுக்கியதாக இருவர் கைது :

ஆம்பூர்: ஆம்பூர் அருகே வெளிமாநில மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த பெண் உட்பட 2 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

ஆம்பூர் அடுத்த பாவரதம்பட்டரை கிராமத்தில் வெளிமாநில மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின் பேரில் உமராபாத் காவல் ஆய்வாளர் நிர்மலா தலைமையிலான காவல் துறையின் பாவரதம்பட்டரை கிராமத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அதேபகுதியைச் சேர்ந்த மஞ்சுளா (49) என்பவர் தனது வீட்டில் வெளிமாநில மது பாட்டில்களை அட்டை பெட்டியில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அவரது வீட்டில் இருந்து 588 வெளிமாநில மதுபாட்டில்களை பறிமுதல் செய்த உமராபாத் காவல் துறையினர் மஞ்சுளாவை கைது செய்தனர்.

அதேபோல, ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடை அருகே எஸ்பி தனிப்படை காவல் துறையினர் நேற்று காலை ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த வல்லதரசன் (50) என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் 170 மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி பேரணாம்பட்டு பகுதியில் விற்பனை செய்வதற்காக கொண்டு செல்வது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவரை காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து 170 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x