Published : 28 Jun 2021 03:14 AM
Last Updated : 28 Jun 2021 03:14 AM
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் பகுதியைச் சேர்ந்தவர் பைசல்கான்(22). இவர், 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி கடந்த ஓராண்டு காலமாக அந்த சிறுமியிடம் அவ்வப்போது நகை, பணம் ஆகியவற்றை அபகரித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பணம், நகையை இழந்த சிறுமி தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என பைசல்கானிடம் கூறியபோது அவர் நண்பர்கள் மூலம் அந்த சிறுமிக்கு மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இது குறித்து வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பைசல்கான் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT