Published : 27 Jun 2021 03:13 AM
Last Updated : 27 Jun 2021 03:13 AM
வனச்சரகர் பதவி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர்ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் வனச்சரகர் பணியிடங்கள் மிக அதிக எண்ணிக்கையில் காலியாக உள்ள நிலையில், வனக்காப்பாளர்களுக்கு வனச்சரகர் பதவி உயர்வு வழங்குவதுதாமதப்படுத்தப்படுகிறது. பதவி உயர்வுபட்டியல் தயாரிக்கப்பட்டு 10 மாதங்களாகியும் நடைமுறைப்படுத்தவில்லை. வனக்காப்பாளர்கள் பலருக்கு 16 ஆண்டுகளில்கிடைத்திருக்க வேண்டிய 2-வது பதவி உயர்வு 21 ஆண்டுகளாகியும் இன்னும் வழங்கப்படாதது சமூக அநீதி. எனவே, வனச்சரகர் பதவி உயர்வை உடனே வழங்க அரசு முன்வர வேண்டும். இவ்வாறு ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT