Published : 26 Jun 2021 03:11 AM
Last Updated : 26 Jun 2021 03:11 AM

40 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் அமைச்சர் :

கடந்த 1980-ம் ஆண்டு புதுச்சேரி காங்கிரஸ் - திமுக கூட்டணி அமைச்சரவையில் ரேணுகா அப்பாத்துரை கல்வி அமைச்சராக இருந்தார். அதன் பிறகு, 40 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் எம்எல்ஏ ஒருவருக்கு தற்போதுதான் புதுவையில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு தொகுதியில் வெற்றி பெற்ற சந்திர பிரியங்கா அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகளான இவர், 2-வது முறையாக நெடுங்காடு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். பாஜக சார்பில் இடம்பெற்றுள்ள நமசிவாயம் வில்லியனூர் தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்று வந்தவர், இம்முறை மண்ணாடிப்பட்டு தொகுதியில் நின்று வெற்றி பெற்றுள்ளார், தற்போது 4-வது முறையாக மீண்டும் அமைச்சராகிறார். இதேபோல் லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார் ஆகியோர் 3-வது முறையாக அமைச்சர்கள் ஆகின்றனர். பாஜக தரப்பில் சாய் சரவணகுமார் முதல்முறை வெற்றி பெற்று அமைச்சராகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x