Published : 25 Jun 2021 03:11 AM
Last Updated : 25 Jun 2021 03:11 AM
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சிறந்த அணி பட்டம் வென்றது என இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். நியூஸிலாந்து அணி சிறப்பாக செயல்பட்டதாகவும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன்பட்டம் வென்றது கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணி.
வலுவான பேட்டிங் வரிசையை கொண்ட இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 217 ரன்களுக்கும் 2-வது இன்னிங்ஸில் 170 ரன்களுக்கும் சுருண்டிருந்தது. இதன் மூலம் மீண்டும் ஒருமுறை பெரிய அளவிலான தொடரில் பட்டம் வெல்லும் வாய்ப்பை இந்திய அணி எந்தவித போராட்ட குணமும் இல்லாமல் எளிதாக தாரை வார்த்தது.
இந்நிலையில், இந்திய அணி யின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “சூழ்நிலைகளுக்கு தகுந்தவாறு சிறப்பாக செயல்பட்ட அணி வெற்றி பெற்றது. உலகசாம்பியன் பட்டத்துக்கு நீண்டகாலமாக காத்திருந்த தகுதியான வெற்றியாளர். பெரியவிஷயங்களுக்கு தரமான உதாரணம் எளிதில் கிடைக்கவில்லை. நியூஸிலாந்து அணி சிறப்பாக விளையாடியது. அந்த அணிக்கு மதிப்பளிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT