Published : 25 Jun 2021 03:14 AM
Last Updated : 25 Jun 2021 03:14 AM

புதிதாக கட்டப்பட்டுள்ள குளியல் தொட்டியில்கோயில் யானை அகிலா குதூகலம் :

திருச்சி: திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் அகிலா என்ற யானை 2011 முதல் சேவையாற்றி வருகிறது. இந்த யானையை குளிப்பாட்ட ஏற்கெனவே ஷவர் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கோயில் வளாகத்தில் உள்ள நாச்சியார் தோப்பு பகுதியில் 20 அடி நீளம், 20 அடி அகலம், 6 அடி ஆழத்தில் குளியல் தொட்டி கட்டப்பட்டுள்ளது. இந்தத் தொட்டியில் யானை அகிலா நேற்று இறங்கி ஆனந்தமாக குளித்தது.

இதுகுறித்து யானைப் பாகன் பா.ஜம்புநாதன், உதவி பாகன் பா.அர்ஜூன் ஆகியோர் கூறும்போது, ‘‘இதுவரை யானை அகிலாவை தினமும் 2 முறையும், கோடைக்காலத்தில் 3 முறையும் ஷவரில் குளிப்பாட்டி வந்தோம். தற்போது கட்டப்பட்டுள்ள தொட்டியில் இன்று(நேற்று) 2 மணி நேரமாக அகிலா ஆனந்தமாக குளித்தது. யானை அகிலா ஒவ்வொரு முறை குளிக்கும்போதும், தொட்டியில் புதிதாக தண்ணீர் நிரப்பப்படும். பயன்படுத்திய தண்ணீர் கோயில் வளாகத்தில் உள்ள தோட்டத்துக்கு பாய்ச்சப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x