Published : 24 Jun 2021 05:51 AM
Last Updated : 24 Jun 2021 05:51 AM

சேலம்  சேலம் அஸ்தம்பட்டி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட அணைமேடு மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் இன்று (24-ம் தேதி) மேற்கொள்ளப்படுகிறது

சேலம்

 சேலம் அஸ்தம்பட்டி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட அணைமேடு மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் இன்று (24-ம் தேதி) மேற்கொள்ளப்படுகிறது. எனவே, ராமநாதபுரம், ஜட்ஜ் ரோடு, கன்னங்குறிச்சி, மோட்டன்குறிச்சி, எம்எல் நகர், மணக்காடு, அம்மன்நகர், தில்லை நகர், சின்ன முனியப்பன் கோயில், காந்திரோடு, மூக்கனேரி, என்ஜிஜிஓ காலனி, சந்திரன் கார்டன் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அஸ்தம்பட்டி துணை மின் நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்

 நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டியில் இன்று (24-ம் தேதி) மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது என நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் ஆ.சபாநாயகம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாமக்கல் அருகே வளையப்பட்டி துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, இன்று காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை வளையப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான புதுப்பட்டி, மேட்டுப்பட்டி, வாழவந்தி, ரெட்டையாம்பட்டி, ஜம்புமடை, செவந்திப்பட்டி, குரும்பப்பட்டி, நல்லூர், திப்ரமகாதேவி, வடுகப்பட்டி, மோகனூர், ஒருவந்தூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது, என தெரிவித்துள்ளார்.

பல்லக்காபாளையம்

 குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையத்தில் இன்று (24-ம் தேதி) மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது என, சங்ககிரி மன்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பல்லக்காபாளையம் துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடக்க உள்ளது. எனவே, இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வளையக்காரனூர், பல்லக்காபாளையம், ஆலத்தூர், புதுப்பாளையம், எக்ஸல் கல்லூரி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

ஓசூர்

 ஓசூர் கோட்டத்தைச் சேர்ந்த ஓசூர், பாகலூர் துணை மின்நிலையம், சிப்காட் பேஸ்-2, ஜுஜுவாடி, மத்திகிரி, ராயக்கோட்டை, இருதுக்கோட்டை, அஞ்செட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் அத்தியாவசியப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று (24-ம் தேதி) காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

இத்துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளான நியூ ஏஎஸ்டிசி ஹட்கோ, மஹாலட்சுமிநகர், பஸ்டேண்ட், பாகலூர் ஹவுசிங்போர்டு, டீச்சர்ஸ் காலனி, நகர், எக்ஸைடு, சிப்காட் பேஸ்-2, மூக்கொண்டப்பள்ளி, அரசனட்டி, டைட்டான் டவுன்ஷிப், குருப்பட்டி, பொம்மண்டப்பள்ளி, கிட்டம்மபட்டி, பெட்டம்பட்டி, வேப்பலம்பட்டி, லட்சுமிபுரம், குந்துக்கோட்டை, நாட்றாம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது என ஓசூர் கோட்ட மின்வாரியத்துறை செயற்பொறியாளர் (இயக்கம் மற்றும் பராமரிப்பு) குமார் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x