Published : 24 Jun 2021 05:51 AM
Last Updated : 24 Jun 2021 05:51 AM
கரோனா தொற்றால் சுற்றுலாத் துறை முடங்கியுள்ளதால் வருவாயின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக, மாமல்லபுரத்தில் உள்ள தள்ளுவண்டி மற்றும் சாலையோர சிறு வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள கலைச்சின்னங்களை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். மாமல்லபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கடலோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் சுற்றுலா பயணிகளை நம்பி பல்வேறு தொழில்கள் மற்றும் வியாபாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால், சாலையோரங்களில் தள்ளுவண்டி கடைகள், சிறு கடைகள் மூலம் பிழைப்பு நடத்திவரும் சிறு வியாபாரிகள் வருவாயின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, சாலையோர வியாபாரிகள் கூறியதாவது: சுற்றுலா மற்றும் சுற்றுலா பயணிகளை நம்பி கடந்த பல ஆண்டுகளாக வாழ்க்கை நடத்தி வருகிறோம். தற்போது சுற்றுலா முடக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். தமிழக அரசு பல்வேறு தளர்வுகள் வழங்கிவரும் நிலையில், சுற்றுலா தலங்கள் திறப்பு குறித்து அறிவிக்காமல் உள்ளது. விரைவில் சுற்றுலா தளங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT