Published : 24 Jun 2021 05:52 AM
Last Updated : 24 Jun 2021 05:52 AM

குழந்தையை கொலை செய்து தாய் தற்கொலை :

வாலாஜாபாத் அருகே உள்ள உள்ளாவூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி உமா. இவர்களுக்கு தீபிகா(6) என்ற பெண் குழந்தை உள்ளது. முருகன், உமா தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி குடும்பப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில் கடந்த சில நாட்களாகவே மன அழுத்தத்தில் இருந்து உமா வீட்டில் யாரும் இல்லாதபோது கதவை மூடிக்கொண்டு மகள் தீபிகாவுக்கு தேநீரில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். பின்னர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் சாலவாக்கம் போலீஸார் மூடியிருந்த கதவை உடைத்து இருவர் சடலத்தையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x