Published : 24 Jun 2021 05:52 AM
Last Updated : 24 Jun 2021 05:52 AM

வாழ்வாதார உறுதி அளிப்பு சான்று அக்டோபர் வரை சமர்ப்பிக்கலாம் :

புதுச்சேரி: புதுச்சேரி கணக்கு மற்றும் கருவூலக இயக்ககம் இயக்குநர் செல்வராஜூ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஓய்வூதியர்கள் வாழ்வாதார உறுதி அளிப்புச் சான்று சமர்ப்பிப்பது வரும் ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு கருவூலக அலுவலகங்களின் வாயிலாக ஓய்வூதியம் பெறும், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களின் 2021 ஆம் வருடத்திற்கான வாழ்வாதார உறுதி அளிப்புச் சான்றிதழினை ( Life Certificate ) கருவூலகத்திற்கு நேரில் வந்தோ அல்லது முறைப்படி அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரி அளித்த சான்றிதழோ அல்லது பொது சேவை மையத்தின் மூலமாகவோ இந்திய அரசின் ஜீவன் பிரமான் www.JeevanPramaan.gov.in என்ற வலைதளத்தின் மூலம் பதிவு செய்ய வாய்ப்புகள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x