Published : 24 Jun 2021 05:52 AM
Last Updated : 24 Jun 2021 05:52 AM

தேர்தல் காரணமாக கரோனா 2-ம் அலை பரவல்: உயர் நீதிமன்றம் கருத்து :

மதுரையைச் சேர்ந்த ரமேஷ், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு 2016 அக்டோபர் முதல் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. எனவே மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், தமிழகத்தில் கரோனா 2-ம் அலை உருவாக சட்டப் பேரவைத் தேர்தல்தான் காரணம். மீண்டும் தேர்தல் நடத்தினால் மக்கள் அதிகளவில் கூடுவர். இது கரோனா பரவ வாய்ப்பாக அமையும். மேலும் தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதில் முடிவு வந்த பிறகே இவ்வழக்கை விசாரிக்க முடியும் என்று கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x