Published : 24 Jun 2021 05:52 AM
Last Updated : 24 Jun 2021 05:52 AM
மதுரை ரயில்வே மருத்துவ மனையில் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு கரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இம்ம ருத்துவமனையில் ரூ.50 லட்சம் செலவில் நிமிடத்துக்கு 250 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டது. இதற்காக ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரம் மருத்துவமனை வளாகத்தில் பொருத்தப்பட்டது.
இதன்மூலம் மருத்துவம னையில் நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன் தடையின்றி கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT