Published : 24 Jun 2021 05:53 AM
Last Updated : 24 Jun 2021 05:53 AM

‘கல்பனா சாவ்லா’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம்’ :

வேலூர்: கல்பனா சாவ்லா விருது பெற தகுதியான வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழகத்தில் தனித்தன்மையுடன் கூடிய வீரமான, துணிச்சல் மிக்க, எதையும் தைரியமாக எதிர்கொள்ளும் ஆற்றல் மிக்க வீரப்பெண்கள், சிக்கலான தருணங்களில் சாதுர்யமாக செயல்பட்டு உயிர்காக்கும் ஆற்றல் மிகுந்த பெண்களுக்கு அரசு சார்பில் ஆண்டுதோறும் ‘கல்பனா சாவ்லா’ விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது.

அதன்படி, 2021-ம் ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருது இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று தமிழக முதல்வர் வழங்கவுள்ளார். எனவே, வேலூர் மாவட்டத்தில் வசித்து வரும் தீரச்செயல்கள் புரிந்த பெண்மணிகள் இந்த விருதினை பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இவ்விருதுக்காக வயது வரம்பு, சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் என எந்த பாகுபாடும் இல்லை. இவ்விருதுக்கான விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜூன் 25-ம் தேதி (நாளை) ஆகும். கல்பனா சாவ்லா விருதுக்கான விண்ணப்பங்களை https://awards.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப் பட்ட விண்ணப்பங்களை உரிய இணைப்புகள் மற்றும் ஆதாரங்களுடன் ‘‘மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நேதாஜி விளையாட்டு அரங்கம், வேலூர் மாவட்டம் 632-001 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x