Published : 23 Jun 2021 03:11 AM
Last Updated : 23 Jun 2021 03:11 AM
தமிழகத்தில் நேற்று புதிதாக 6,895 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
‘‘தமிழகத்தில் நேற்று ஆண்கள்3,914, பெண்கள் 2,981 என மொத்தம் 6,895 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக கோவையில் 870, ஈரோட்டில் 741, சென்னையில் 410 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 24லட்சத்து 36,819 ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் 56,886 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
194 பேர் உயிரிழப்பு
அரசு, தனியார் மருத்துவமனைகளில் 194 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் 24 பேர்இறந்துள்ளனர்’’ என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT