Published : 23 Jun 2021 03:11 AM
Last Updated : 23 Jun 2021 03:11 AM

கரோனா 3-வது அலை வந்தால் எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது : பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை

கரோனா 3-வது அலை வந்தால்,அதை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

பேரவையில் நேற்று அதிமுகஉறுப்பினர் சி.விஜயபாஸ்கரின் கேள்விக்கு பதில் அளித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற மே 7-ம் தேதி தமிழகத்தில் கரோனா பாதிப்பு 26,465 ஆக இருந்தது. அடுத்த 10 நாட்களில் 36,184 என்ற அளவுக்கு உயர்ந்தது. முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்ட போர்க்கால நடவடிக்கைகளால் ஜூன் 21-ம் தேதி கரோனா பாதிப்பு 7,427 ஆக குறைந்துள்ளது. அடுத்தஒரு வாரத்துக்குள் கரோனா பாதிப்பு முடிவுக்கு வரும்.

திமுக ஆட்சிக்கு வரும் முன்பு, தினமும் சராசரியாக 61,441பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதினமும் சராசரியாக 1,34,926பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கருப்பு பூஞ்சைநோயால் 2,510 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து மாவட்டத் தலைமை மருத்துவமனைகளிலும் கருப்பு பூஞ்சை சிகிச்சைக்காக தனி வார்டு தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை 130 பேர் கருப்பு பூஞ்சை நோயில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கரோனா 3-வது அலை வராது,வரவே கூடாது. ஆனால் 3-வதுஅலை வந்தால், அதை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது. அதற்கான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னை எழும்பூர்குழந்தைகள் நல மருத்துவமனையில் 250 படுக்கைகள் கொண்டசிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x