Published : 23 Jun 2021 03:11 AM
Last Updated : 23 Jun 2021 03:11 AM
பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் பேசும்போது, ‘‘தமிழக அரசுப் பணிகளில் தமிழே தெரியாத வெளி மாநிலத்தினர் தேர்வு செய்யப்படுகின்றனர். டிஎன்பிஎஸ்சி தேர்வை வேறு மாநிலத்தவர்கள் எழுதுவது எப்படி. இதனால் தமிழர்களுக்கு வாய்ப்பு பாதிக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ளமத்திய அரசு நிறுவனங்களில் 90 சதவீதம் தமிழர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்’’ என்றார்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்பேசும்போது, ‘‘கடந்த 10 ஆண்டுகளில் எந்த அரசாணை, எந்தஉத்தரவு, விதிகளின் அடிப்படையில் இதுபோன்ற பணிகள் வழங்கப்பட்டன என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது.அதை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT