Published : 23 Jun 2021 03:12 AM
Last Updated : 23 Jun 2021 03:12 AM

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் - முழு கவச உடையணிந்து கரோனா நோயாளிகளை சந்தித்த மாவட்ட ஆட்சியர் :

கோவை சிங்காநல்லூர் இஎஸ்ஐமருத்துவமனையில், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் நேற்று முழுகவச உடை (பிபிஇ கிட்)அணிந்து கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் பிரிவுக்கு சென்று, அவர்களின் தேவைகளை கேட்டறிந்தார். மேலும்,கோவை அரசு மருத்துவமனை,இஎஸ்ஐ மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக அமைக்கப்பட்டுள்ள கூடுதல் படுக்கை வசதிகளையும் ஆட்சியர் பார்வையிட்டார்.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறும்போது, "குழந்தைகள் கரோனா தொற்றால்பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் கோவை அரசு மருத்துவமனை குழந்தைகள் நலப்பிரிவில் 30 தீவிரசிகிச்சை படுக்கைகள், 100 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், 370 சாதாரண படுக்கைகள் என500 படுக்கைகளும், இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 100 தீவிர சிகிச்சை படுக்கைகள், 70 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் என மொத்தம் 170 படுக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன” என்றனர்.

ஆய்வின்போது, மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா, இ.எஸ்.ஐ மருத்துவமனை டீன் ரவீந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x