Published : 23 Jun 2021 03:12 AM
Last Updated : 23 Jun 2021 03:12 AM

ஈரோடு  ஈரோட்டில் மின்நிலைய பராமரிப்பு காரணமாக இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது

ஈரோடு

 ஈரோட்டில் மின்நிலைய பராமரிப்பு காரணமாக இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மின்பாதைகளில் பராமரிப்புப் பணி காரணமாக ஈரோடு திண்டல் தங்கம் நகர், அம்மன் நகர், சிவன் நகர், சக்தி நகர், செல்வம் நகர், பழையபாளையம், யுஆர்சி நகர், ராஜீவ் நகர், டெலிகம் சிட்டி, செங்கோடம்பாளையம் ஆகிய இடங்களில் இன்று (23-ம் தேதி) காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

காந்திநகர் துணை மின்நிலைய பராமரிப்புப் பணி காரணமாக, காஞ்சிகோயில், பள்ளபாளையம், சின்னியம்பாளையம், அய்யன்வலசு, பெருமாபாளையம், முள்ளம்பட்டி, கருக்கம்பாளையம், துடுப்பதி, சமாதானபுரம், பாலக்கரை, தொட்டியனூர், நசியனூர், கோயில்பாளையம், எல்லப்பாளையம், செங்காளிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (23-ம் தேதி) காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது, என மின்வாரியம் அறிவித்துள்ளது.

 சென்னிமலை துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணி காரணமாக, சென்னிமலை நகர் பகுதி, ஊத்துக்குளி சாலை, ஈங்கூர் சாலை, குமரபுரி, சக்தி நகர், பெரியார் நகர், நாமக்கல் பாளையம் அறச்சலூர் சாலை, குப்பிச்சிபாளையம், திப்பம்பாளையம், அம்மாபாளையம், அசோகபுரம், புதுப்பாளையம், கொடுமணல், ராமலிங்கபுரம், ஓரத்துப்பாளையம், அய்யம்பாளையம், சென்னிமலைபாளையம், பசுவப்பட்டி, முருங்கத்தொழுவு, எம்.பி.என் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (23-ம் தேதி) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

உப்புபாளையம்

 குமாரபாளையம் அருகே உப்புபாளையத்தில் இன்று(23-ம் தேதி) மின்நிறுத்தம் செய்யப்படும் என பள்ளிபாளையம் செயற்பொறியாளர் வாசுதேவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

உப்புபாளையம் துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மோடமங்கலம், வால்ராசாபாளையம், அம்மன் கோவில், நவக்காடு, உப்புபாளையம், மணக்காடு, அத்திக்காட்டூர், நட்டுவம்பாளையம் ஆனங்கூர் ரயில்வே கேட் மற்றும் குமாரபாளையம் நகரம், புள்ளாக்கவுண்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

ஓசூர்

 ஓசூர் கோட்டத்தைச் சேர்ந்த ஓசூர், பாகலூர், நாரிகானபுரம், சிப்காட் பேஸ் 1, 2, ஜுஜுவாடி, பூனப்பள்ளி, அஞ்செட்டி, இருதுக்கோட்டை, தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, கெலமங்கலம் ஆகிய துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று (23-ம் தேதி) காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

அதன்படி, பாரதிதாசன் நகர், ரயில்வேஸ்டேசன், தின்னூர், குருப்பட்டி, அச்செட்டிப்பள்ளி, கக்கனூர், கொத்தப்பள்ளி, எஸ்.இ.பள்ளி, சிச்சிருகானப்பள்ளி, பேரிகை, முதுகுறுக்கி, நெரிகம், அத்திமுகம், கதிரேப்பள்ளி, பேரண்டப்பள்ளி, கொத்தூர், எல்லம்மா கொத்தூர், அம்மலெட்டி, புதுப்பட்டி, முகளூர், கொட்டக்கரை, தேவனம்பட்டி, முகளூர், ஒசபுரம், வன்னப்பள்ளி, மாரச்சந்திரம், திப்பசந்திரம், மடிக்கல், ஜார்லட்டி, சித்தாண்டபுரம், சீங்கோட்டை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது என

ஓசூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் (இயக்கம் மற்றும் பராமரிப்பு) குமார் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x