Published : 23 Jun 2021 03:12 AM
Last Updated : 23 Jun 2021 03:12 AM

கோவூர் சுந்தரேஸ்வரர் திருக்கோயில் - புதிய தேருக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்க அமைச்சர் உத்தரவு :

மாங்காடு

போரூர் அருகே கோவூரில் சுந்தராம்பிகை சமேத சுந்தரேஸ்வரர் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயில் சோழர் காலத்தில் கட்டப்பட்டது. இந்த கோயிலின் 36 அடி உயரம் கொண்ட தேர் சிதிலமடைந்து காணப்படுகிறது. இதை சீரமைக்க வேண்டும் அல்லது புதிய தேர் உருவாக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனிடையே ஆலந்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் இந்த கோயில் வருவதால், இந்த தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தா.மோ.அன்பரசன் சிதிலம் அடைந்துள்ள தேருக்கு பதிலாக அறநிலையத் துறையின் சார்பில் புதிய தேர் உருவாக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.

இந்நிலையில் தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் கோயிலுக்கு புதிய தேர் உருவாக்குவது தொடர்பாக தமிழக ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறநிலையத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் புதிய தேர் அமைக்க திட்ட மதிப்பீடுகளை தயாரிக்க அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

பழமை மாறாமல் புதிய தேர் செய்யப்பட உள்ளது என அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x