Published : 23 Jun 2021 03:13 AM
Last Updated : 23 Jun 2021 03:13 AM

தூத்துக்குடி தூத்துக்குடி நகர மின் விநியோக கோட்ட செயற்பொறியாளர் விஜய சங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மின்பகிர்மான வட்டம், தூத்துக்குடி நகர கோட்டத்துக்கு உட்பட்ட உயர் மின் அழுத்த பாதைகளில் பழுதுகள் சீரமைத்தல், சாய்ந்த நிலையிலுள்ள மின்கம்பங்களை சரி செய்தல் மற்றும் ஆங்காங்கே மின்பாதையில் அறுந்து தொங்கிக் கொண்டிருக்கும் பட்டங்களை அகற்றுதல் போன்ற பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று (23-ம் தேதி) காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை அய்யனார்புரம் துணைமின் நிலையத்துக்கு உட்பட்ட டேவிஸ்புரம், ஜே

தூத்துக்குடி

தூத்துக்குடி நகர மின் விநியோக கோட்ட செயற்பொறியாளர் விஜய சங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மின்பகிர்மான வட்டம், தூத்துக்குடி நகர கோட்டத்துக்கு உட்பட்ட உயர் மின் அழுத்த பாதைகளில் பழுதுகள் சீரமைத்தல், சாய்ந்த நிலையிலுள்ள மின்கம்பங்களை சரி செய்தல் மற்றும் ஆங்காங்கே மின்பாதையில் அறுந்து தொங்கிக் கொண்டிருக்கும் பட்டங்களை அகற்றுதல் போன்ற பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று (23-ம் தேதி) காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை அய்யனார்புரம் துணைமின் நிலையத்துக்கு உட்பட்ட டேவிஸ்புரம், ஜே.ஜே.நகர், சுனாமி காலனி, டி.சவேரியார்புரம், மாப்பிள்ளையூரணி, பாரதி நகர், கே.வி.கே.சாமி நகர், புதூர்பாண்டியாபுரம், சில்லாநத்தம் மற்றும் எட்டயபுரம் சாலை, தூத்துக்குடி நகரம் எட்டயபுரம் சாலை துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட எட்டயபுரம் சாலை, முத்தம்மாள் காலனி, ஹவுசிங் போர்டு காலனி, அண்ணாநகர் 1 முதல் 12-வது தெரு வரை, மங்கலபுரம், கே.வி.கே.நகர் மேற்கு, டிஎம்பி காலனி, சிதம்பரநகர், பாளையங்கோட்டை சாலை, குறிஞ்சி நகர், தனசேகரன் நகர், போல்பேட்டை மேற்கு, நேதாஜி நகர், தேவர் காலனி, ஐயப்பா நகர், ஆட்டோ துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கேம்ப் 2, என்எல்சி, என்டிபிசி, கடலோர காவல் படை குடியிருப்பு, முத்து நகர், காதர் மீரான் நகர், ஒத்த வீடு, ஓட்டப்பிடாரம் துணைமின் நிலையத்துக்கு உட்பட்ட ஓசநூத்து, குலசேகரநல்லூர், ஆரைக்குளம் ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.

திருநெல்வேலி

கடையநல்லூர் மின்வாரிய செயற்பொறியாளர் இரா. நாகராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடையநல்லூர் மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட விஸ்வநாதபேரி உபமின் நிலையத்தில் நாளை ( 24-ம் தேதி) காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே, இந்நேரத்தில் சிவகிரி, தேவிபட்டிணம், விஸ்வநாதபேரி, தெற்குசத்திரம், வடக்குசத்திரம், வழிவழிகுளம், ராயகிரி, மேலகரிசல்குளம், கொத்தாடைப்பட்டி, வடுகபட்டி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x