Published : 23 Jun 2021 03:13 AM
Last Updated : 23 Jun 2021 03:13 AM

சிறுமிக்கு செல்போனில் பேசி தொல்லை கொடுத்த 3 பேர் கைது :

கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை சின்னகடைத் தெருவைச் சேர்ந்த செல்வம் மகன் மணிகண்டன்(18), ஒரு சிறுமியை காதலிப்பதாக கூறி, அவருடைய போட்டோவை வாங்கியுள்ளார். அந்த போட்டோவை மணிகண்டன் தனது நண்பர்களான சுவாமிமலை மேலவீதி அறிவழகன் மகன் அபிஷேக் (19), அங்காளம்மன் கோயில் தெரு நடராஜன் மகன் செல்வம்(20) ஆகியோருக்கு அனுப்பியுள்ளார்.

இவர்கள் 3 பேரும் சேர்ந்து சிறுமியிடம் செல்போனில் பேசி, பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதுகுறித்து சுவாமிமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில், இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து, மணிகண்டன், அபிஷேக், செல்வம் ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x