Published : 22 Jun 2021 03:11 AM
Last Updated : 22 Jun 2021 03:11 AM
நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு குறித்து பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதன்படி, மத்திய அரசு 183 பக்கங்கள் கொண்ட பதில் மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த மனு, நீதிபதிகள் அசோக் பூஷண் மற்றும் எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு, 3 நாட்களில் எழுத்து பூர்வமாக பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப் பட்டது.- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT