Published : 22 Jun 2021 03:11 AM
Last Updated : 22 Jun 2021 03:11 AM

அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் : ஒரே நேரத்தில் 3,000 பேர் யோகா பயிற்சி :

சர்வதேச யோகா தினம் நேற்றுகொண்டாடப்பட்டது. இதையொட்டி உலகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் யோகாசன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் நேற்று 3,000 பேர் ஒரே நேரத்தில் யோகாசனம் செய்தனர். இதில் கரோனா தடுப்பு நடைமுறைகள் கண்டிப்புடன் பின்பற்றப்பட்டன.

மூச்சுப் பயிற்சியின்போதும் பலர் முகக்கவசம் அணிந்திருந் தனர். சமூக இடைவெளி நேர்த்தியாக கடைபிடிக்கப்பட்டது. டைம்ஸ் சதுக்க பிரம்மாண்ட திரைகளில் நேரடியாக நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. பொது மக்கள், சுற்றுலாப் பயணிகள் யோகாசன நிகழ்ச்சியை ஆர்வ முடன் பார்த்தனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய துணைத் தூதரக அதிகாரி ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறும்போது, ‘‘உலகம் முழுவதும் சர்வதேச தினம் கொண்டாடப்பட்டாலும் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் யோகாசன நிகழ்ச்சி நடைபெறுவது சிறப்புமிக்கது. யோகா மூலம் உலகம் ஒரு குடும்பம் என்ற சிந்தனை மேலோங்குகிறது’’ என்று தெரிவித்தார்.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x