Published : 22 Jun 2021 03:11 AM
Last Updated : 22 Jun 2021 03:11 AM

நாட்டில் தினசரி கரோனா தொற்று 53,256-ஆக குறைந்தது :

நாட்டில் கரோனா வைரஸால் தினசரி பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 53,256-ஆகக் குறைந்தது. இது கடந்த 88 நாட்களில் மிகக் குறைவானதாகும்.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 53,256 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 88 நாட்களில் இது மிகக் குறைந்த அளவாகும். இதைத் தொடர்ந்து நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,99,35,221-ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து 14-வது நாளாக தினசரி கரோனா தொற்று ஒருலட்சத்துக்கும் கீழே குறைந்துள்ளது. நேற்று முன்தினம் 58,419 பேர் கரோனாவால் பாதிக் கப்பட்டனர்.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 1,422 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3,88,135-ஆக அதிகரித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், நேற்று 78,190 கரோனா நோயாளிகள் சிகிச்சை முடிந்து வீடு திரும் பினர். கடந்த 39 நாட்களாக கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

தற்போது 7,02,887 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இது கரோனா பாதிப்படைந்தோர் மொத்த எண்ணிக்கையில் 3.83 சதவீதமாகும்.

நாட்டில் இதுவரை 39,24,07,782 பேருக்கு பரிசோதனை செய்யப்பட் டுள்ளது. இவ்வாறு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x