Published : 22 Jun 2021 03:11 AM
Last Updated : 22 Jun 2021 03:11 AM

ஆளுநர் உரைக்கு - அரசியல் தலைவர்களின் வரவேற்பும்.. எதிர்ப்பும்.. :

சென்னை

ஆளுநர் உரைக்கு வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்து அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:

தேமுதிக தலைவர் விஜயகாந்த்: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 நிதியுதவி, நகைக் கடன் தள்ளுபடி, சிலிண்டர் மானியம் தொடர்பான அறிவிப்புகள் இல்லை.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: ஆளுநர் உரை வழக்கமான சடங்காக, வெறும் அறிவிப்புகளின் தொகுப்பாக உள்ளது. அதில் உள்ள அம்சங்களை எந்த அளவுக்கு ஆட்சியாளர்கள் செயல்படுத்துவார்கள் என்று தெரியவில்லை.

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி: ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என வாக்குறுதி தந்தே,திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. காகிதப் பூ மணக்காது; வெற்று வெள்ளைஅறிக்கை பெட்ரோல், டீசல் விலையை குறைக்காது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x