Published : 22 Jun 2021 03:12 AM
Last Updated : 22 Jun 2021 03:12 AM
இதுதொடர்பாக, கோவை குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை ஆய்வாளர் ஆரோக்கிய ஜான்சி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்,‘‘ கோவை எல்லைக்குட்பட்ட பகுதியில், கடந்த 12-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை, ரேஷன் அரிசி கடத்திய மற்றும் பதுக்கி வைத்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களிடம் இருந்து 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரேஷன் அரிசி கடத்தப்படுவதைத் தடுக்க, மாவட்ட எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது’’ எனக் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT