Published : 22 Jun 2021 03:12 AM
Last Updated : 22 Jun 2021 03:12 AM

கோவையில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க கண்காணிப்பு பணி தீவிரம் :

இதுதொடர்பாக, கோவை குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை ஆய்வாளர் ஆரோக்கிய ஜான்சி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்,‘‘ கோவை எல்லைக்குட்பட்ட பகுதியில், கடந்த 12-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை, ரேஷன் அரிசி கடத்திய மற்றும் பதுக்கி வைத்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களிடம் இருந்து 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரேஷன் அரிசி கடத்தப்படுவதைத் தடுக்க, மாவட்ட எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது’’ எனக் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x