Published : 22 Jun 2021 03:12 AM
Last Updated : 22 Jun 2021 03:12 AM

தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் நிதி முறைகேடு நடப்பதாக ஆட்சியரிடம் புகார் :

உடுமலை

உடுமலையில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக, மாவட்ட ஆட்சியரிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.

உடுமலையில் நேற்று மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் ஆய்வு மேற்கொண்டார். திருமூர்த்தி அணை நிலவரங்களை கேட்டறிந்த அவர், அணை பகுதியையும் சுற்றிப்பார்த்தார்.

தளி பேரூராட்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறதா? அதற்கான ஆவணங்கள் பராமரிக்கப்படுகிறதா? என கேட்டறிந்தார்.

அதன்பின் அங்குள்ள அரசுமேல்நிலைப் பள்ளி, ஜல்லிபட்டியில் அரசு மருத்துவமனையில்ஆய்வு மேற்கொண்டு, அங்குள்ளஅடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

உடுமலை ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வின்போது, ஒன்றியத் தலைவர் மகாலட்சுமி முருகன் வரவேற்றார்.

அப்போது, தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்த விவரங்களை ஆட்சியர் கேட்டறிந்தார். இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் வி.சவுந்திரராஜன், தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ள தாகக்கூறி புகார் மனு அளித்தார்.

அதேபோல கணக்கம்பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற நிதி முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி குடியிருப்போர் சங்க நிர்வாகி செல்வராஜ் மனு அளித்தார். மனுக்களை பெற்றுக் கொண்ட ஆட்சியர், விரைவில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். ஆய்வின்போது, வட்டாட்சியர் ராமலிங்கம், குடிமைப்பொருள் வட்டாட்சியர் தயாநந்தன் உட்பட பலர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x