Published : 22 Jun 2021 03:12 AM
Last Updated : 22 Jun 2021 03:12 AM

நாமக்கல் அதிமுக கூட்டத்தில் சசிகலாவைக் கண்டித்து தீர்மானம் :

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட அதிமுக கூட்டத்தில் சசிகலாவைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாமக்கல் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்எல்ஏ பி.தங்கமணி தலைமை வகித்துப் பேசினார். கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அரசியலில் இருந்து விலகியிருப்பதாக ஊடகங்கள் மூலம் அறிவித்த சசிகலா, தற்போது நாள்தோறும் தொலைபேசியில் சிலருடன் பேசும் விநோதமான ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறாா். இது அதிமுக தொண்டா்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இதற்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. சசிகலாவிடம் பேசிய அனைவரும் அதிமுகவில் இருந்து உடனடியாக நீக்கப்படுவதை நாமக்கல் மாவட்ட அதிமுக வரவேற்கிறது. நீதிமன்ற அறிவுரையின்படி கரோனா தொற்றால் இறந்தவா்களின் இறப்பு சான்றிதழில் உண்மையான காரணத்தை குறிப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சி நிர்வாகிகள், சாா்பு அணியினர் பலர் கலந்து கொண்டனா்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x