Published : 22 Jun 2021 03:12 AM
Last Updated : 22 Jun 2021 03:12 AM
திருவள்ளூர் மாவட்டம் வல்லூரில், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் தேசிய அனல் மின் கழகம் சார்பில் 3 அலகுகள் கொண்ட அனல் மின் நிலையம் இயங்குகிறது. இதில், 1,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், இந்த அனல் மின் நிலையத்தின் 2-வது அலகில் கொதிகலன் குழாயில் திடீரென பழுது ஏற்பட்டது. இதனால், அந்த அலகில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால், 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
கொதிகலன் குழாயில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்யும் பணிகளில் மின் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அப்பணி விரைவில் முடிவுக்கு வந்துவிடும். அதன் பிறகு மின் உற்பத்தி தொடங்கப்படும் என, அனல் மின் நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT