Published : 21 Jun 2021 03:13 AM
Last Updated : 21 Jun 2021 03:13 AM
ஈரான் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள இப்ராகிம் ரைசிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஈரான் அதிபர் பதவிக்கான தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் மொத்தம் 48.8% வாக்குகளே பதிவாகின. இவற்றில் 61.95 சதவீத வாக்குகளைப் பெற்று அந்நாட்டின் தலைமை நீதிபதி இப்ராகிம் ரைசிவெற்றி பெற்றதாக ஈரான் உள்துறை அமைச்சகம் சனிக்கிழமை அறிவித்தது. இதனிடையே இந்தத் தேர்தலில் முறைகேடு நடந்ததாக அவரது எதிர்ப்பாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
ஈரான் இப்போது பொருளாதார சிக்கலில் இருக்கிறது. மேற்கத்திய நாடுகளை எதிர்க்கும் இப்ராகிம் ரைசி பொருளார சிக்கலில்இருந்து ஈரானை மீட்க நடவடிக்கை எடுப்பார் என்று அந்நாட்டு பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில், ஈரான் புதிய அதிபர் இப்ராகிம் ரைசிக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘‘ஈரான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட இப்ராகிம் ரைசிக்கு எனது வாழ்த்துகள். இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான வரத்தக, கலாச்சார உறவை மேலும் வலுப்படுத்த அவருடன் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT