Published : 21 Jun 2021 03:13 AM
Last Updated : 21 Jun 2021 03:13 AM

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : நியூஸி. பந்துவீச்சில் 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்திய அணி :

சவுத்தாம்டன்

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்திய அணி.

சவுத்தாம்டனில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 2-வது நாள் ஆட்டத்தில் 64.4 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. கேப்டன் விராட் கோலி 44, அஜிங்க்ய ரஹானே 29 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்த நிலையில் விராட் கோலி மேற்கொண்டு ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஜேமிசன் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். தொடர்ந்து ரிஷப் பந்த் 4 ரன்களில் நடையை கட்டினார். ரஹானே 117 பந்துகளில், 49 ரன்கள் எடுதத நிலையில் நெய்ல் வாக்னர் பந்தில் ஆட்டமிழந்தார்.

அஸ்வின் 22 ரன்களில் டிம் சவுதி பந்தில் வெளியேறினார். இஷாந்த் சர்மா 4, ஜஸ்பிரீத் பும்ரா 0 ரன்களில் ஜேமிசன் பந்தில் நடையை கட்டினர். இறுதியாக ரவீந்திர ஜடேஜா 15 ரன்களில் டிரெண்ட் போல்ட் பந்தில் வெளியேற இந்திய அணி 92.1 ஓவர்களில் 217 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. நியூஸிலாந்து அணி சார்பில் கெய்ல் ஜேமிசன் 5 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து பேட் செய்த நியூஸிலாந்து 29 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் எடுத்திருந்தது. டேவன் கான்வே 31, டாம் லேதம் 25 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x