Published : 21 Jun 2021 03:13 AM
Last Updated : 21 Jun 2021 03:13 AM
பெட்ரோல், டீசல் விலையில் திமுகவின் இரட்டை வேடம் தெரிந்துவிட்டது என்று பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் பெட்ரோல், டீசல்விலையை குறைக்க வாய்ப்பே இல்லை என்று நிதியமைச்சர் கூறியுள்ளார். பெட்ரோல் விலை ரூ.5, டீசல் விலை ரூ.4 குறைக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்றுகூறியதன் மூலம், ஆட்சிப் பொறுப்பேற்ற 50 நாட்களுக்குள்ளாகவே திமுகவின் சாயம் வெளுத்து விட்டது. எதிர்க்கட்சியாக இருந்தபோது பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்றுவலியுறுத்திய திமுக, இப்போதுஅதை எதிர்க்கிறது.
தேர்தலுக்கு முன்பு, விலைகளை குறைப்பதாகக் கூறிய திமுக இப்போது குறைக்க முடியாது என்கிறது. இதுதான் இரட்டை வேடம். இதை தமிழகமக்கள் ஏற்க மாட்டார்கள். மக்களை ஏமாற்ற அரசு முயற்சிக்க கூடாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT