Published : 21 Jun 2021 03:13 AM
Last Updated : 21 Jun 2021 03:13 AM
கேரள மாநில நிதி அமைச்சர் கே.என்.பாலகோபால், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை ஊரடங்கால் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ளது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சூழலில் தனி நபர்கள் தாங்கள் பெற்ற கடனை திரும்ப செலுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.
எனவே தனி நபர்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கடன் தவணைக்கு டிசம்பர் 31 வரை கால அவகாசம் அளிக்க வேண்டும். இந்த காலத்தில் வட்டி மீதான வட்டி, அபராத வட்டி உள்ளிட்டவை வசூலிக்கக் கூடாது
இத்தகைய சூழலில் மத்திய அரசின் உதவி மிகவும் அவசியமாகிறது. இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT