Published : 21 Jun 2021 03:14 AM
Last Updated : 21 Jun 2021 03:14 AM

அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸை மாற்றினால் நடவடிக்கை : ஆபரேட்டர்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் இருந்து 18 சதவீத ஜிஎஸ்டியுடன், மொத்தம் ரூ.165 என்ற குறைந்த கட்டணத்தில் 200-க்கும் அதிகமான சேனல்களை வழங்கி வருகிறது. மேலும், செட்டாப் பாக்ஸ்களை முற்றிலும் இலவசமாக உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மூலம் வழங்கி வருகிறது. அரசு செட்டாப் பாக்ஸ் பெற்று பயனடைந்துவரும் சந்தாதாரர்களின் விருப்பம் இல்லாமல், தங்களின் சுய லாபத்துக்காக சில கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தனியார் நிறுவனங்களோடு கூட்டு சேர்ந்துகொண்டு, அரசு செட்டாப் பாக்ஸ்களை மாற்றினாலோ அல்லது அரசு சிக்னல் வராது என்று தவறான தகவல்களை தெரிவித்து அரசு சந்தாதாரர்களை தனியார் சந்தாதாரர்களாக மாற்ற முயன்றாலோ, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

அதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடும் ஆபரேட்டர் கள் மீது 0422-2522886, 180042 52911 என்ற எண்களில் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x