Published : 21 Jun 2021 03:15 AM
Last Updated : 21 Jun 2021 03:15 AM

லால்பேட்டை முஸ்லிம் பட்டதாரிகள் கல்விச்சங்கத்தினர் - முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்கல் :

லால்பேட்டை முஸ்லிம் பட்டதாரிகள் கல்விச் சங்கத்தினர் வேளாண்அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் முதல்வர் பொதுநிவாரண நிதிக்கு ரூ. 1 லட்சத்துக்கான காசோலையை வழங்கினர்.

கடலூர்

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டை முஸ்லிம் பட்டதாரிகள் கல்விச் சங்கத்தினர் நேற்று முட்டத்தில் வேளாண் துறைஅமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்தை அவரது இல்லத்தில்சந்தித்து சால்வை அணிவித்து, வாழ்த்துக்கூறினர். பின்னர் சங்கத்தின் சார்பில் தலைவர் ஜாபர்அலி முதல்வர் பொதுநிவாரணநிதிக்கு ரூ. 1 லட்சத்துக்கான காசோ லையை அவரிடம் வழங்கினார். சங்கத்தின் செயலாளர் ஷேக் முஹம்மது, பொருளாளர் அஸ்கர்ஹுஸைன் ,செயற்குழு உறுப்பினர்நஜீர்அஹமது, உறுப்பினர் அஹமதுல்லா, ராஜா மற்றும் தெற் கிருப்பு நெடுமாறன்,மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x